ஒற்றையடி பாதையில்
உனக்காய் நான் காத்துநின்ற
ஓராயிரம் நிமிடங்கள்...!
உன்னிடம் நான்
காதல் தேடிய காலங்களில்
நான் தொலைத்த,
காதல் காலங்கள்...!
நீ கிடைப்பாய் என்பதற்காக
உன்னுடன் நான் செலவிட்ட
என் நாட்கள்...!
சின்ன சண்டைகளின் முடிவில்
உன் மவுனத்தை உடைப்பதற்கு
நான் போராடிய தருணங்கள்...!
உன் குரல் கேட்பதற்காகவே
தூக்கத்தை இழந்த
பல நூறு இரவுகள்...!
உன்னை நினைப்பதிலே
நான் தொலைத்துக்கொண்டிருக்கும்
என் ஆயுளின் நொடிகள்...!
என்னிடம் திருடிய
இதயத்தை நீ
கசக்கி பிழிந்து
திருப்பித் தந்துவிட்டாய்...!
எப்பொழுது நீ
திருப்பிதர போகிறாய்...?
நீ என்னிடம் திருடிய
என் பொழுதுகளை...
ஒரு வார்த்தையில் என்னை உடைத்தவளே
இன்று ஏனோ விட்டு சென்றாய்
உன் அன்பிற்காய் ஏங்கிய
நாட்களை எப்போது தருவாய்......
உனக்காய் நான் காத்துநின்ற
ஓராயிரம் நிமிடங்கள்...!
உன்னிடம் நான்
காதல் தேடிய காலங்களில்
நான் தொலைத்த,
காதல் காலங்கள்...!
நீ கிடைப்பாய் என்பதற்காக
உன்னுடன் நான் செலவிட்ட
என் நாட்கள்...!
சின்ன சண்டைகளின் முடிவில்
உன் மவுனத்தை உடைப்பதற்கு
நான் போராடிய தருணங்கள்...!
உன் குரல் கேட்பதற்காகவே
தூக்கத்தை இழந்த
பல நூறு இரவுகள்...!
உன்னை நினைப்பதிலே
நான் தொலைத்துக்கொண்டிருக்கும்
என் ஆயுளின் நொடிகள்...!
என்னிடம் திருடிய
இதயத்தை நீ
கசக்கி பிழிந்து
திருப்பித் தந்துவிட்டாய்...!
எப்பொழுது நீ
திருப்பிதர போகிறாய்...?
நீ என்னிடம் திருடிய
என் பொழுதுகளை...
ஒரு வார்த்தையில் என்னை உடைத்தவளே
இன்று ஏனோ விட்டு சென்றாய்
உன் அன்பிற்காய் ஏங்கிய
நாட்களை எப்போது தருவாய்......
Comments
Post a Comment