கனத்த மனதும்... கண்ணீர் துளியும்...
நீ என் பெயர் சொல்லி
அழைப்பதுபோல் ஒரு உணர்வு...!
பாதி தூக்கத்திலும்
பதறியடித்து எழுகிறேன்...!
காலையில் கண்விழித்ததும்
நெஞ்சோரம் ஒட்டிக்கொள்ளும்
உன் நினைவு துளிகள்
கசக்கி பிழிகின்றன...!
என் உயிரை...
நம் காதல் கணங்களும்,
நம் கைகோர்த்த பயணங்களும்,
அழியாத சுவடுகளாய்
அடிநெஞ்சில் பதிந்துகிடக்கின்றன...!
கங்கையாய் ஊற்றெடுக்கும்
கண்ணீர்துளிகள் - என்
கன்னம் தொடும்போது - நான்
கனத்த மனதோடு நினைத்துக்கொள்கிறேன்...!
நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்...!
என் கண்ணீர்துளிகளாவது
மிஞ்சியிருக்கும்...!!
நீ என் பெயர் சொல்லி
அழைப்பதுபோல் ஒரு உணர்வு...!
பாதி தூக்கத்திலும்
பதறியடித்து எழுகிறேன்...!
காலையில் கண்விழித்ததும்
நெஞ்சோரம் ஒட்டிக்கொள்ளும்
உன் நினைவு துளிகள்
கசக்கி பிழிகின்றன...!
என் உயிரை...
நம் காதல் கணங்களும்,
நம் கைகோர்த்த பயணங்களும்,
அழியாத சுவடுகளாய்
அடிநெஞ்சில் பதிந்துகிடக்கின்றன...!
கங்கையாய் ஊற்றெடுக்கும்
கண்ணீர்துளிகள் - என்
கன்னம் தொடும்போது - நான்
கனத்த மனதோடு நினைத்துக்கொள்கிறேன்...!
நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்...!
என் கண்ணீர்துளிகளாவது
மிஞ்சியிருக்கும்...!!

Comments
Post a Comment