இமை மூடினாலும்,
கனவில் தேடினாலும்
காண்பது உன் முகமே என்கிறாள்...!
உனை பிரிந்தால்
உயிர் பிரியுமென
ஏதேதோ உளறுகிறாள்...!
யார் எதிர்த்தாலும்,
காதலை எதிர்த்து
போர் தொடுத்தாலும்,
உன்னிடமே கைதியாவேன் என
வசனம் பேசுகிறாள்...!
ஆயுள் முடியும் வரை கூட
அன்பே உனக்காய் காத்திருப்பேன் என
அடிக்கடி சொல்கிறாள்...!
தூக்கத்தை
தொலைத்தேன் என்கிறாள்...!
தூரத்திலிருந்தாலும்
நினைப்பேன் என்கிறாள்...!!
அவள் என்னிடம் சொல்லும்
அத்தனையும்
பொய்யென தெரிந்தும்,
அவளிடம் நான்
ஒற்றை பொய் மட்டுமே சொல்கிறேன்...!
“நான் உன்னை நம்புகிறேன்...”
அந்த பொய்யை உண்மையாய்
நினைத்து இன்னும் - உன்
போலி அன்புக்காய் காத்துகிடக்கிறேன்
எனை ஏனோ கொல்கிறாய் பெண்ணே
கனவில் தேடினாலும்
காண்பது உன் முகமே என்கிறாள்...!
உனை பிரிந்தால்
உயிர் பிரியுமென
ஏதேதோ உளறுகிறாள்...!
யார் எதிர்த்தாலும்,
காதலை எதிர்த்து
போர் தொடுத்தாலும்,
உன்னிடமே கைதியாவேன் என
வசனம் பேசுகிறாள்...!
ஆயுள் முடியும் வரை கூட
அன்பே உனக்காய் காத்திருப்பேன் என
அடிக்கடி சொல்கிறாள்...!
தூக்கத்தை
தொலைத்தேன் என்கிறாள்...!
தூரத்திலிருந்தாலும்
நினைப்பேன் என்கிறாள்...!!
அவள் என்னிடம் சொல்லும்
அத்தனையும்
பொய்யென தெரிந்தும்,
அவளிடம் நான்
ஒற்றை பொய் மட்டுமே சொல்கிறேன்...!
“நான் உன்னை நம்புகிறேன்...”
அந்த பொய்யை உண்மையாய்
நினைத்து இன்னும் - உன்
போலி அன்புக்காய் காத்துகிடக்கிறேன்
எனை ஏனோ கொல்கிறாய் பெண்ணே

Comments
Post a Comment