என்னுள் உள்ள வலிகள்
உறக்கத்தை கெடுத்த
உன் முகமும் - என்
உயிருக்குள் கேட்ட
உன் குரலும்.
இப்பொழுதெல்லாம் எனக்கு
நினைவுக்கு வருவதில்லை...!
உன்னை நினைத்து
கவிதை எழுதிய
என் பேனாவும்,
உன்னை நினைப்பதிலே
நான் செலவிட்ட
என் நேரங்களும்,
மரணித்துப்போய்
மாதங்கள் பலவாகிவிட்டன...!
உன்னை முழுவதும் - நான்
மறந்துவிட்டதாய் சொல்லி
என் உதடுகள்
பேசிக்கொள்கிறது...!
ஆனாலும்...
எங்கேயாவது
உன் பெயர் கேட்டால்
ஒரு நொடி நின்று துடிக்கும்
என் இதயமும்,
நீ பிரிந்து சென்றதாய்
சிறு கனவு வந்தாலும்
பாதி தூக்கத்தில் - நான்
பதறியடித்து எழுந்தபின்
எனக்கே தெரியாமல்
என் இமை விளிம்புகளில்
ஒட்டியிருக்கும்
ஒருதுளி கண்ணீரும்,
மறக்காமல் சொல்லிவிடுகின்றன...!
என் கசங்கிய இதயத்தின்
எங்கோ ஓர் மூலையில்
வாழ்ந்துகொண்டிருக்கும்,
உனக்காகத்தான்
நான் இன்னும்
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை...
நீ அறிவாயா பெண்ணே....
என்றும் உன் நினைவில்
உறக்கத்தை கெடுத்த
உன் முகமும் - என்
உயிருக்குள் கேட்ட
உன் குரலும்.
இப்பொழுதெல்லாம் எனக்கு
நினைவுக்கு வருவதில்லை...!
உன்னை நினைத்து
கவிதை எழுதிய
என் பேனாவும்,
உன்னை நினைப்பதிலே
நான் செலவிட்ட
என் நேரங்களும்,
மரணித்துப்போய்
மாதங்கள் பலவாகிவிட்டன...!
உன்னை முழுவதும் - நான்
மறந்துவிட்டதாய் சொல்லி
என் உதடுகள்
பேசிக்கொள்கிறது...!
ஆனாலும்...
எங்கேயாவது
உன் பெயர் கேட்டால்
ஒரு நொடி நின்று துடிக்கும்
என் இதயமும்,
நீ பிரிந்து சென்றதாய்
சிறு கனவு வந்தாலும்
பாதி தூக்கத்தில் - நான்
பதறியடித்து எழுந்தபின்
எனக்கே தெரியாமல்
என் இமை விளிம்புகளில்
ஒட்டியிருக்கும்
ஒருதுளி கண்ணீரும்,
மறக்காமல் சொல்லிவிடுகின்றன...!
என் கசங்கிய இதயத்தின்
எங்கோ ஓர் மூலையில்
வாழ்ந்துகொண்டிருக்கும்,
உனக்காகத்தான்
நான் இன்னும்
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை...
நீ அறிவாயா பெண்ணே....
என்றும் உன் நினைவில்

Comments
Post a Comment